நாகை : நாகை மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிக்காக குறைந்த விலைக்கு நிலம் கையகப்படுத்தும் முடிவுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சதுர அடிக்கு இழப்பீடாக ரூ.6 மட்டுமே தர முன்வந்திருப்பதால் வரும் மக்களவை தேர்தலை புறக்கணிக்க கிராம மக்கள் முடிவு செய்துள்ளனர்.