தஞ்சாவூர் : தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் சரஸ்வதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மேலும் 25 மாணவிகளுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த பள்ளியில் 6 மாணவிகள் மற்றும் 1 ஆசிரியருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில் மேலும் 25பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் உள்ள 11 பள்ளிகளில் மாணவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் என கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 169 ஆக உயர்ந்துள்ளது.