திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தின் அடியக்கமங்கலத்தில் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தை தொடர்ந்த 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக அரசு அறிவுறுத்திய பின்னரும் போராட்டத்தை தொடர்ந்ததால் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அரசு பேரிடராக அறிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிடாமல் தொடர்ந்து கொரோனா தொற்று நோய் பரப்பும் விதமாக நடந்து கொண்டதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அரசு அனுமதி இல்லாமல், காவல்துறை அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகவும் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.