கோவை: கோவையில் கடந்த 2020 ஜூலை 4ம் தேதி இலங்கை தாதா அங்கோட லொக்கா (37) மர்மமான முறையில் இறந்தார். இது தொடர்பாக அவரது காதலி உட்பட 3 பேரை கோவை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். இறந்தது அங்கோட லொக்காதானா? என்ற சந்தேகம் கிளம்பியதால் இலங்கையில் வசிக்கும் அவரது தாய் சந்திரிகா பெராராவின் ரத்த மாதிரி மற்றும் அவரது உடற்கூறு மாதிரிகளை வைத்து டிஎன்ஏ ஆய்வு நடத்தப்பட்டது. இதில் இறந்தது அங்கோடா லொக்காதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து 2 ஆண்டாக அவரது இறப்பில் இருந்த மர்மம் விலகியது.