தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் குறுவை சாகுபடிக்காக காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு கல்லணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக் கால்வாய், கொள்ளிடம் ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் கடந்த 12ம் தேதி திறக்கப்பட்ட நீர் முக்கொம்பு வழியாக கல்லணைக்கு வந்ததால் தற்போது நீர் திறக்கப்பட்டுள்ளது.