திருச்சி: திருச்சியில் தொழில் மைய அலுவலகத்தில் நேற்று நடந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் ரூ.3 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தொழில் மையத்தின் பொது மேலாளர் ரவீந்திரன் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியுள்ளது. ரவீந்திரனின் வீட்டில் நடத்திய சோதனையில் ரூ.6 லட்சம் பணம், 50 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.