புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் கைகாட்டி டாஸ்மாக் கடைக்கு குழந்தையுடன் வந்து மது வாங்கிய சங்கர் என்பவர் சிறையில் அடைக்கப்பட்டார். ஏனாதி கறம்பை சங்கர் தனது கைக்குழந்தையுடன் மதுவாங்க வந்தபோது ஊர்காவல்படை காவலர் தடுத்து நிறுத்தினர். இந்நிலையில் வழக்கு பதிந்த வடகாடு போலீசார் சங்கரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.