புதுச்சேரி: புதுச்சேரியில் தற்போது காற்று மாறி வீசி வருவதாக பிரதமர் மோடி பாஜக பொதுக்கூட்டத்தில் பேசினார். வளர்ச்சி பணிகள் புதுச்சேரி மக்களுக்கு கூடுதல் வாய்புகளை கொண்டு வரும் என பேசினார். சிறிது நேரத்திற்கு முன் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் தொடங்கப்பட்டன என கூறினார். சுயசார்பு திட்டத்தில் முக்கிய பங்காற்றும் என தெரிவித்தார். மக்களிடம் அதிகாரம் இருக்கும் வகையில் பாஜக கூட்டணி ஆட்சி அமைக்கும் என கூறினார்.