திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் 4 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருவாரூர் அருகே கிடாரங்கொண்டான் அரசு கலைக்கல்லூரியில் வைக்கப்பட்டுள்ளது. இங்கு பாதுகாப்பு பணியில் போலீசாருடன் தீயணைப்பு வீரரான மன்னார்குடியை சேர்ந்த அற்புதம்(48) நேற்றுமுன்தினம் பணியில் இருந்தார். நேற்று காலை அவரை காணவில்லை. அங்கிருந்த கழிவறை உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. சந்தேகம் அடைந்து மேல்புறமாக பார்த்தபோது உள்ளே அற்புதம் மயங்கி கிடந்தது தெரியவந்தது. கதவை உடைத்து அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.